2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கைதிகள் இருவர் கூரைமீது ஏறி போராட்டம்

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனை கைதியொருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு  வழங்கி விடுதலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு சிறைக் கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறியே குறித்த கைதிகள் இருவரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் வசித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X