2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கொக்கைன் பயன்படுத்தும் அமைச்சர்கள் இருக்கின்றனர்’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொக்கைன் பயன்படுத்தும்  அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றார்களென, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைக்கப்பட்டு வரும் கண்டி- குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாக்கந்துர மதுஷை கைதுசெய்த விடயத்தில் பூரண பொறுப்பு பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி லத்தீப்பை​யும், அதற்கான கௌரவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சாரும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப் பொருள் வர்த்தகர்கள் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப் பொருளுக்காக செயற்படும் கலைஞர்களுடன் தனக்கு கொடுக்கல் வாங்கல் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் பல அரசியல்வாதிகளுக்கு மதுஷுடன் தொடர்புள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .