Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேரரொருவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தருக்கு, உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் போரில், இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு, விசாரணைக்காகச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், கொலை செய்யப்பட்டிருந்தார்.
இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தேரரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம், நேற்று (11) உத்தரவு பிறப்பித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
38 minute ago
2 hours ago