2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொலை செய்யப்பட்ட பொலிஸுக்கு பதவி உயர்வு

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேரரொருவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தருக்கு, உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் போரில், இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு, விசாரணைக்காகச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், கொலை செய்யப்பட்டிருந்தார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, ​கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தேரரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம், நேற்று (11)  உத்தரவு பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .