2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு, தலைமன்னாருக்கான ரயில் சேவை இடை நிறுத்தம்

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்குச் செல்லும் ரயில் சேவைகள் இன்று (17) முதல் ஒருவார காலத்துக்கு தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் ஆகிய இரு பிரதேசங்களுக்கு இடையிலுள்ள  பகுதியில் காணப்படும் பழைய பாலத்தை, அப்பகுதியிலிருந்து அகற்றிவிட்டு புதியப் பாலத்தினை நிறுவதற்காகவே இந்தச் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து மதவாச்சிக்கு மாத்திரமே ரயில் சேவை இடம்பெறும்

மதவாச்சியிலிருந்து தலைமன்னார்க்குச் செல்லும் பயணிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு ரயில் இணைப்பு பஸ் சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .