Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற வந்த இருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உடுமுல்ல மற்றும் மாளிகாகொடல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவர், சிகிச்சைக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு வருகைத் தந்த போது, அவர்களுக்கு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதே, இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு சுங்கத் திணைக்களத்தின் பணியாளர், பேலியகொட மைக்ரோ நிறுவனத்தின் பணியாளர், ஜா-எல கெம்சோ நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago