2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சங்கங்களை நீதிமன்ற அமைச்சில் பதிவு செய்ய நடவடிக்கை

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழுள்ள சகல சங்கங்களையும் நீதிமன்ற அமைச்சில் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குவது அவசியம் என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிறைச்சாலைகளிலுள்ள நலன்புரி சங்கங்களின் நிதி கையாள்கைத் தொடர்பில், வெளிப்படைத்தன்மை இன்மை காரணமாக குறித்த நிதியில் ஊழல், மோசடி இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவையாளர் சங்கம், விளையாட்டு, பௌத்த சங்கங்கங்கள் உள்ளிட்ட நலன்புரி சங்கங்கள் பல செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .