2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சட்டக்கல்வி மாணவர்களை அதிகரிக்கவும்’

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டக்கல்வியை அணுகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம், திட்டமொன்றை முன்வைத்துள்ளது.

நாட்டில், சட்டக்கல்வி பயின்ற தகுதி பெற்ற சட்டதரணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு, இலங்கை சட்டதரணிகள் சங்கத்தால், பிரதமர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காகத் தேவைப்படும் வெட்டுப்புள்ளிகளின் அளவு, மிகவும் உயர்வாகக் காணப்படுகின்றமையால், வருடாந்தம் சட்டக்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக, குறித்த அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .