2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டப்படி வேலையினால் மின் தடை

Amirthapriya   / 2018 மே 16 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொடர்ந்தும் சட்டப்படி வேலைகளில் ஈடுபட்டு வருவதால், நாட்டில் சில பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அனுராதப்புரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் களுபோவில பிரதேசத்திலும்  இன்றைய தினம் (16) காலை மின்சாரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகால மின்னுற்பத்திக்கு பொதுப் பாவனைகள் ஆணைக்குழு இன்னமும் அனுமதி வழங்காமைக்காவே, கடந்த 9 ஆம் திகதியிலிருந்து மின்சார சபை பொறியிலாளர்கள் சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைக்கு, உரிய அதிகாரிகள் சரியானத் தீர்வை முன்வைக்காத வரையிலும் இந்தப் போராட்டம் தொடருமென மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .