2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீன பிசிஆர் இயந்திரத்தில் கோளாறு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன், சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பிசிஆர் பரிசோதனை இயந்திரம் மே மாதம் முல்லேரியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட நிலையில், கடந்த 6 நாள்களாக இது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனை இயந்திரம் செயழிலந்துள்ளதால், பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிசிஆர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தல் உள்ளிட்ட தொற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால், சுமார் 20ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X