2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சனிக்கிழமைகளிலும் சேவைகளை பெறலாம்’

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார்  வாகன திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றை சனிக்கிழமைகளிலும் திறப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தீர்மானித்துள்ளது.

மோட்டார் வாகன சேவையில் மிகவும் பயனுள்ள சேவையை மக்களுக்கு வழங்க வேண்டுமென்றும், இதன்படி நுகெகொடையிலுள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் சனிக்கிழமைகளில் திறக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இச்சேவையினூடாக வழமை போல சனிக்கிழமைகளிலும் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற சேவைகளை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் கிடைக்கப்பெறுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X