2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சுனாமி தரவை வழங்கும் ஆழ்கடல் மிதவை மாயமாகிவிட்டது

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தை காலம் தாழ்த்தாது அறிந்துகொள்வதற்காக, ஆழ்கடலில் கடல் மேற்பரப்பில், நிலையாக நிறுவப்பட்டிருந்த ஆழ்கடல் தரவு மிதவை மாயமாகிவிட்டதாக அறிய முடிகின்றது.   

ஆகையால், அந்த மிதவையிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதியிலிருந்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது.   

அந்த மிதவை தொடர்பில் தகவல் கிடைத்தால், தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரத்துக்கு 0719353009 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அந்த முகவரகம் கேட்டுக்கொண்டுள்ளது.   

அந்தமான் தீவுகளுக்கு அண்மையில், சர்வதேச கடல் வலயத்தில், வடக்கு அகலக்கோடு 7.01 மற்றும் கிழக்கு அகலக்கோடு 88.07 என்ற இடத்திலேயே இந்த ஆழ்கடல் தரவு மிதவை நிறுவப்பட்டிருந்தது என்றும் அந்த முகவரகம் தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .