Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 17 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி செயலகத்தால் “கிராம சக்தி“ விசேட வேலைத்திட்டம் தற்போது, ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 12 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்ததுடன், கிராம மட்டங்களை மையப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட சுமார் 1000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ், விசேட தேவையுடடைய மற்றும் முதியவர்களுக்கான தேசிய வேலைத்திட்டம், நிலையான பாடசாலை அபிவிருத்தி திட்டம், சிறுவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி வேலைத்திட்டம், தேசிய விவசாய வேலைத்திட்டம், போதை தடுப்பு வேலைத்திட்டம், சிறுநீரக நோய் ஒழிப்பு, மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கான நிதி திறைசேறி மூலம் ஜனாதிபதி செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கபட்ட சில வேலைத்திட்டங்களும் இதில் உள்ளடங்குவதுடன், சிறுநீரக நோய், போதை தடுப்பு வேலைத்திட்டம், சிறுநீரக நோய் தொடர்பான வேலைத்திட்டம், மரநடுகை வேலைத்திட்டம் என்பன இந்த அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது, 1000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட வேலைத்திட்டங்களானது 2020ஆம் ஆண்டளவில் 5000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டிருக்குமெனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் சுகதாச உள்ளகரங்களில் இது தொடர்பான இதன் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மாகாண அமைச்சர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களென அனைத்து அரச அதிகார்கள், அரச நிறுவனங்கள், விசேடமாக தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களிடம் சரியான தகவல்கள் சென்றமையாமைக்கான காரணம் இந்த வேலைத்திட்டங்களை விட ஏனைய விடயங்களுக்கு அதிக முக்கியதுவம் வழங்கப்படுகின்றது. எனவே ஊடகங்கள் இந்த விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago