2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜே.வி.பிக்கு ரூ. 10 மில்லியன் செலுத்துமாறு விமலுக்கு உத்தரவு

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணிக்கு (​ஜே.வி.பி), 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு, கொழும்பு வணிக நீதிமன்றம், இன்று (11) உத்தரவிட்டது.

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த “நெத்த வெனுவட்ட அத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சூறையாடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலேயே, மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன், குறித்த நூலை விநியோகத்துக்கும், நீதிமன்றத்தால் தடையுத்தரவு ​பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .