2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தப்பியோடிய தாய் சிக்கினார்

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், “ஐடிஎச்” இல் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது குழந்தையுடன் தப்பியோடிய தாய், நேற்று (21) சிக்கிக்கொண்டார். 

 199559410060 என்ற தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை கொண்டவரான ஜயசிங்க முதியன்சலாகே ருவனி நிஷங்கலா கருணாரத்ன,என்பவரே தப்பித்து தலைமறைவாகி இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது குழந்தையுடன் தப்பியோடிய அந்தத் தாய், ஹெலியகொடையில் வைத்து அந்த குழந்தை ஒரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அத்தாய் தலைமறைவாகி இருந்தார்.

குழந்தை வாங்கிய குடும்பத்தினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அந்த குடும்பத்தினார், அந்த தாய்க்கு உறவினர்கள் என தெரியவருகின்றது.

இதேவேளை, ஹெலிய கொட பிரதேசத்திலேயே மறைந்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X