2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நாளாந்த பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையொன்று நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்புக்கான பிரதான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள முடியாமையே என அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தை நாளை காலை 8.30 மணிக்கு ஈ.பீ.டீ.பீ கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெறவிருப்பதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தையொன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப்(பத்மநாபா), ஈ.பீ.டீ.பீ, ஈரோஸ் மற்றும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(R.A)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .