2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்- பொலிஸார் முதலாவது சந்திப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸாருக்கும்,தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதலாவது கலந்துரையாடல் இன்று(7) இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் பொது செயலக அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன,மேல் மாகாணத்திற்கான போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X