2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடர் மழையால் மின்சாரம் இல்லை

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடளாவிய ரீதியில், நேற்று (14) பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக, களுத்துறை, கொழும்பு, மாத்தறை, காலி, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில், மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ​அமைச்சர், இன்று (14) கூறியுள்ளார்.

மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக, மின்துண்டிப்பு ஏற்படவில்லை என்றும் எனினும், வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவளிக்காத ஒரு சில ஊழியர்களைக் கொண்டு, சில இடங்களில் மாத்திரம், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சரிசெய்துள்ளதாகவும் அவர் ​தெரிவித்துள்ளார்.

இன்னும் சில இடங்களில், துண்டிக்கப்பட்ட மின்சாரம், மீண்டும் இணைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .