2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நபர் படுகொலை; கல்கிஸையில் ஆறு பேர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கல்கிஸை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம்,  கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை சில்வஸ்டர்  வீதி பாலத்துக்கு அருகில் இடம்பெற்றிந்தது.

சந்தேக நபர்களால் இரண்டு நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்  ஒருவர் உயிரிழந்திருந்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 17 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இன்று (17) கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X