2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமரும் முன்னிலையாவார்’

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, பிரதமர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் தயாராகவிருப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ​தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் பிரதமர் முன்னிலையானதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பிரதமர் முன்னிலையாக வேண்டிய திகதி குறித்து, பிறகு அறிவிப்பார்களென்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X