2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாலக சில்வாவின் கருத்துக்கள் குறித்து விசாரணை செய்ய உத்தரவு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயத்தில், பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளமைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்ய சில சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X