2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பகிடிவதையில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலை மாணவர் மூவர் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கான கல்வி நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்த மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை மற்றும் இன்னுமொரு மாணவரை உடல் ரீதியாகத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாணவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசகரான வைத்தியர் சஞ்ஜீவ பிரசாத் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 01 July 2010 09:37 PM

    பகிடி எப்படி வதை ஆகிறது? ஒருவர் மற்றவரை ஆள வேண்டும் என்று நினைப்பது சகஜம். ஆனால் அதற்கு குறுக்குவழிகள் இல்லை. அன்பினால் அதை அடைய முடியாவிட்டால் கேலிசெய்வதில் அர்த்தம் இல்லை. மாணவப்பருவத்தில் பழகும் இந்தபழக்கம் இவர்கள் படிப் பின் வாழ்க்கையிலும் தொடரும் ஒருவரை பழிக்க அவரது மதம் மொழி இனம் குடும்பம் மட்டுமல்லாமல் அவரது இயற்கைகுறைபாடுகள் உயரம் அங்கஹீனம் எல்லாம் பகிடியாகும் நிலை கல்விக்கு உரியதல்ல ஒரு படியாதவன் கூட நாகரிகம் என்று அறிந்திருக்க வேண்டியது. முதற்படிக்கு வருபவரை மட்டுப்படுத்த இது ஓர் உத்தியோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .