2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படகு விபத்தில் உயிரிழிந்த மீனவர்களுக்கு நட்டஈடு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெய்வேந்திரமுனை கடற்பரப்பில்  நேற்று  (10) இடம்பெற்ற படகுவிபத்தில் உயிரிழந்த மீனவர்கள் இருவரினது குடும்பத்திற்கு 10இலட்ச ரூபாய் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்​தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த மீனவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலையும், குடும்ப நடவடிக்கைகளுக்காக மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்தொழில் அமைச்சின் செயலாளர் ஜகத்.பீ.விஜேவீரவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (11) அறிவுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .