2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை, கரவெட்டியில் மூவருக்கு கொரோனா உறுதி

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும்   கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை யிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X