2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பேருவளை மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது

Kogilavani   / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசிதகுமார டி சில்வா 

பேருவளை மீன்பிடி துறைமுகம், இன்று (23) முதல் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, துறைமுக அதிகாரி எட்வர்ட் தயாமல் தெரிவித்துள்ளார்.

பேருவளையிலிருந்து பேலியாகொட மீன் சந்தைக்கு லொறியொன்றில் மீன்களைக் கொண்டுச் சென்ற லொறியின் சாரதி உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, பேருவளை மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (21) 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, 10 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .