2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் ஜுன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போழுது நிலவும் தபால்  ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கப்பெறுமனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .