2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழகத்தில் மோதல் மூன்று மாணவர்களுக்கு காயம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானையில் உள்ள  பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்கள் சிலர்,  அங்கு கல்வி நடவடிக்கைககளில் ஈடுபட்டிருந்த சட்ட பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது காயமடைந்த மாணவரொருவரை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்ல முயற்சித்த போது, இந்தச் சம்பவம் வெளியே தெரிந்தால் பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுமெனத் தெரிவித்த குறித்த பல்கலைக்கழகத்தின் அதிகாரியொருவர் வேரஹெர ​பிரதேசத்திலுள்ள பல்கலைகழத்துக்குரிய வைத்தியசாலைக்கு குறித்த மாணவனைக் கொண்டுச் செல்லுமாறு பணித்துள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்துக்கும் அறிவிக்க வேண்டாம் என்றும், இது தொடர்பில் பல்க​லைக்கழகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென்றும் காயமடைந்த மாணவர்களிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .