2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்து:8 பெண்கள் காயம் இருவரின் நிலை கவலைக்கிடம்

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கல ஏற்றுமதி வலயத்திலுள்ள ஆடைத்  தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ் வண்டி, இன்று காலை (12), ஹபராதுவ- ஹெடிவத்த பகுதியில் வைத்து வீதியை விட்டு  விலகி தென்னை மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 8 பெண்கள், ஹபராதுவ- கலுகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் அவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X