2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாதாள உலகக் குழு சிறைச்சாலைக்குள் கைதி மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கும்பளைச் சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர் காயமடைந்த சம்பவமொன்று காலி சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

காலி சிறைச்சாலையின், விருந்தினர் அறையில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தில் ஏற்பட்ட பெருங்காயம் காரணமாக பின்னர் அவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் அவர் மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு ஒன்றுத் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை பார்வையிட வந்த கொஸ்கொட சுஜி என அழைக்கப்படும் பாதாள உலகத் தலைவரின் உதவியாளர்கள் 5 பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் படுகொலை சம்பவம் தொடர்பில் குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளதோடு, அவருக்கும் குறித்த குழுவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் மோதல் ஒன்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பலிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .