2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்றினால் இன்று (09) இரத்துச் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி  இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டு  பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .