2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மதுபானசாலைகள் அதிகாலை வரை திறந்திருக்க அனுமதி

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய,  வெளிநாட்டு மதுபான நிலையங்கள் காலை 11 மணியிலிந்து இரவு 10 மணிவரையும், சுற்றுலா அனுமதியுடனான மதுபான நிலையங்கள் அதிகாலை 2 மணிவரை திறந்திருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை குறித்த மதுபான விற்பனை நிலையங்கள் இரவு 12 மணிவரை திறந்திருந்த நிலையில், இந்த நேரத்தை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரைக்கும் திறந்திருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானியில் நிதிஅமைச்சர் மங்கள சமரவீர இன்று கையெழுத்திட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .