2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்தல விமானநிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் வருகைத்தரும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டு அது பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தல விமானநிலையத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறு ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றில் மூன்று ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகவும், நான்காவதாக மற்றுமொரு கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு ஸ்கேனர் கருவிகள் இவ்வாறு அகற்றப்படுகின்றமை விமான நிலையத்தின் பாதுகாப்புக் குறித்த அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாக விமானநிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .