2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனைவிக்காக ஹெரோய்ன் கொண்டுசென்றவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது​செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்கச் சென்ற நபர் ஒருவர், மனைவிக்குக் கொண்டுசென்ற உணவுப் பொதியில், 4,220 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில், சிறைச்சாலைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், தான் கொண்டுசென்ற உணவுப் பொதியில் மறைத்து, மனைவிக்கு ஹெரோய்ன் கொண்டுசெல்வதாக, வாழைத்தோட்டப் பொலிஸ் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமையவே, சந்தேகநபரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சந்தேகநபரைச் சோதனையிட்ட போது, 10 பேருக்கு விநியோகிக்கக் கூடிய அளவில், உணவுப் பொதிகள் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒரு பொதியிலிருந்தே, குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .