2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மிளகாய்த்தூள் வீசியும் தாக்கியும் குடும்பஸ்தர் படுகொலை

Kogilavani   / 2018 மே 17 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய - எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 21 வயது குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை, பொலிஸார் இன்று (17) மீட்டுள்ளனர்.

வெஹரயாய, எதிலிவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான நிரோஷன் லக்மால் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவரது கழுத்தில், கத்தி வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் முகத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே, சடலத்தை மீட்டதாகவும் கூறினர்.

இவர் பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும், இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .