2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீற்றர் இல்லாது ஓடும் ஓட்டோகளுக்குத் தண்டம்

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 01:15 - 1     - {{hitsCtrl.values.hits}}

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் ஓட்டோக்கள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுப்பர் என்று தெரிவித்த வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை, அவ்வாறான ஓட்டோக்களைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்துள்ளது.

விடயதானத்துக்குப் பொறுப்பான, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

“அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, ஓட்டோக்களில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத ஓட்டோக்களைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கான பரிந்துரைகளை, ஓட்டோகளில் கட்டண மீற்றரில்லாமல் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது தொடர்பில் ​தேடியறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவே முன்வைத்துள்ளது. அதனடிப்படையிலேயே, மேற்​கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • raj Thursday, 12 July 2018 01:15 AM

    This is a business strategy

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X