2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மூவரும் சந்தித்துப் பேச்சு

A.Kanagaraj   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய மூவரும், சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. 

ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தச் சந்திப்பு நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாகவும் அறியமுடிகிறது. அதாவது, அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரே, இந்த மூவரும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது. 

அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஒன்றாக சென்றே, ஜனாதிபதியைச் சந்தித்ததாக அறியமுடிகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X