2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரணிலின் சவாலை ஏற்றார் மஹிந்த?

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரி வீதத்தை குறைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் வரியை 20 வீதமாக குறைத்துக் காட்டுவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக தெரிவித்து மக்களை தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தமது  இயலாமையை மறைத்துக்கொள்வதற்காக மற்றவர்களை குற்றம்சாட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X