2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரயில் பருவச்சீட்டு இருந்தால், இ.​போ.ச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் பருவச்சீட்டு  உள்ளவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்,அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுகின்ற அதுசொகுசு பஸ்களிலும் பயணிகளுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறப்பிட்டுள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத காப்பாளர்கள்  முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பயணிகள் எதிர்நோக்கும் அ சௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இ.போ.ச பஸ்களில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .