2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லஹிரு விளக்கமறியலில்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர, மற்றும் பல்கலைக்கழக மத குருமார்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெம்பிட்டிய சுகணானந்த தேரர் ஆகிய இருவரும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்றைய தினம் (12)கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே,  நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி நேற்று முன்தினம் (10)கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .