2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசேட சுற்றிவளைப்பில் 98 பேர் கைது

J.A. George   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) காலை 06 மணிமுதல் இன்று (30) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 42 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த 06 பேர், சட்டவிரோத மதுபானங்களுடன் 37 பேர், கோடா வைத்திருந்த 06 பேர் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .