2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வினாத்தாள்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடளாவிய ரீதியில் நேற்று (10) இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையின் போது, நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் தோற்றிய பரீட்சார்த்திகக்கு, பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது என, இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சைக்காக புத்தளம் மாவட்டத்தில் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள், அலைபேசியுடன் பரீட்சை எழுதியமை தொடர்பான விசாரணைகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X