2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'விமான நிலையத்துக்கு 3 மணிநேரத்துக்கு முன்னமே வாருங்கள்'

Editorial   / 2018 மே 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவிருக்கும் பயணிகள், தாங்கள் விமான நிலையத்திலிருந்து புறப்படும் நேரத்துக்கு, மூன்று மணித்தியாலங்கள் முன்பதாகவே விமான நிலையத்தை வந்தடையுறுமாறு, ஸ்ரீ லங்கன் விமானச் சேவை அறிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த விமானச் சேவை அறிவித்துள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரை, மூன்று மணிநேரத்துக்கு முன்னமே, விமான நிலையத்துக்கு வருகைதருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்களே, இவ்வாறு சட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X