2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விருந்தில் பங்கேற்ற பெண் மாயம்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் விருந்துபசார நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்பிட்டியைச் சேர்ந்த, 29 வயது டபிள்யு.இஷாரா நிஷாதி என்ற பெண்ணே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போயுள்ள பெண்ணின் கணவரால் நீர்கொழும்பு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய பதில் கிடைக்காத நிலையில், அவர் கல்பிட்டி பொலிஸில் நேற்றைய தினம் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6ஆம் திகதி இரவு நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் ஒன்றில் குறித்த பெண், தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருடம் பங்கேற்றுள்ளார்.

இரவு ஆரம்பமான விருந்துபசார நிகழ்வு அதிகாலை வரை நீடித்துள்ளர். விருந்துபசாரத்தின் நிறைவில் தனது மனைவி காணாமற்போயுள்ளமை தொடர்பில் கணவர் அறிந்துகொண்டுள்ளார்.

தனது மனைவி காணாமற்போனமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .