2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைத்தியர் ஷாபியின் தடுப்பு காவல் உத்தரவு இரத்து

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு வழங்கப்பட்டிருந்த, 3 மாத கால தடுப்புக் காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வைத்தியர் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான  வழக்கு விசாரணைக்கு எடுத்து ​கொள்ளப்பட்ட போது, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சிகள் போதுமானதாக இல்லை எனத்  தெரிவித்து, நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவையும் இரத்துச் செய்வதாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே அறிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .