2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்திய நிலையம் என்ற பெயரில் விபசாரம்; 4 பெண்கள் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை - யட்டியன பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வைத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியை,  மினுவாங்கொடை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, அநுராதபுரம், மாகோ, கல்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 - 40 வயதுக்கிடைப்பட்ட நான்கு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றுவதாகக் கூறி வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று குறித்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .