2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஷாபிக்கு எதிரான வழக்கு டிசெம்பருக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நான்காவது முறையாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அசாதாரணமான முறையில் சொத்து சேகரித்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கருத்தடைகளை மேற்கொண்டதா இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் 12 பக்கங்களை கொண்ட அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்காக வழக்கு விசாரணைகள்  டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .