2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹைபோ ஒக்சிஜன் இயந்திரம் வழங்கி வைப்பு

Amirthapriya   / 2018 மே 17 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலின் காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக, ‘ஹைபோ ஒக்சிஜன்’ இயந்திரத்தை காலி – கராப்பிட்டிய மருத்துவமனைக்கும், மாத்தறை பொது மருத்துவ மனைக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த இயந்திரத்தால், அழுத்தத்துடன் வேகமாக ஒக்சிஜனை வழங்க முடிவதோடு, சுருங்கியிருக்கும் நுரையீரலை விரிவடையவும் செய்யமுடியுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தெற்கில் பரவி வரும் வைரஸ் தொற்றானது, நிமோனியா வகை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .