2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹோட்டலில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க, கலகெதர பகுதியில்  உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) இரவு 9 மணிக்கும் 9.30 க்கும் இடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முகத்தை துணியால் மறைத்த நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே  துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X