2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

2ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து நோயாளி படுகாயம்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்த 36 வயதுடைய நபர், பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் கோளாறு காரணமாக, கடந்த சனிக்கிழமை, அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரே, இவ்வாறு கீழே விழுந்து காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவர் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து, சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாகவும், அவர் மனநோயாளியா என்பது தொடர்பில் பரிசீலிக்கவுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X