2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

11 மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பலாங்கொடை பிரதேசத்துக்குட்பட்ட கடற்பரப்பில், சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருடன் இணைந்து காலி பிரதேச மீன்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது, அம்பலாங்கொடை பிரதேசத்திலிருந்து 3 கடல் மைல் தூரத்தில், மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த மீனவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .