2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

14க்கு முன்னர் வியாக்கியானம்

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டிருக்கும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (11) தீர்மானித்துள்ளது.   

ஜனாதிபதியின் அந்த கோரிக்கையை ஆராய்ந்த ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாமே, மேற்படி தீர்மானித்துள்ளது.  

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான, நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹாரே, கே.டி.சித்ரசிறி மற்றும் சிசிரத ஆப்றூ ஆகியோரடங்கிய குழுவே, இவ்வாறு நேற்று (11) கூடி ஆராய்ந்தது.  

இதன்போது, சார்பாகவும் எதிராகவும் கருத்துகள் முன்​வைக்கப்பட்டுள்ளன. தற்போது அமுலில் இருக்கும் அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியில் இருக்கமுடியுமென சட்டமா அதிபர் எடுத்துரைத்தார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரமே நான் பதவியேற்றேன். அதனடிப்படையில், என்னுடைய பதவிக்காலம் ஆறு வருடங்களாகும். எனினும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், என்னுடைய பதவிக்காலம் 4 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என, உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி கொண்டுவந்தார். அதனடிப்படையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில் தேடியறிந்து, எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர், வியாக்கியானத்தை தருமாறு கேட்டிருந்தமைக்கு அமைவாகவே, நேற்றைய முழுநாளும் 5 நீதியரசர்களும் ஆராய்ந்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .